Friday, September 09, 2011

thandavakoney







நீரால் உடல்கழுவி நித்தநித மூவேளை
சோறால் குடல்கழுவும் சோம்ப பிறவிமலை
சேறாம் இடர்கழுவ சேர்ந்தாயே அண்ணலடி
மாறாச் சுடர் தழுவவே.


நாறென வெள்லெலும்பை நன்கிணைத்து கட்டிவைத்து
நாறிடும் மூட்டைச் சதையொட்டி நீர்க்குருதிச்
சேரனதான எண்சான் உடம்பில் உன் நினைவே
சீருரும் தாமரை யாம்.


தொப்புள் கொடிபுடிச்சி தொத்திவந்த இப்பிறப்பு
எப்ப தொடங்கியதோ எப்போ தடங்கிடுமோ
செப்பவே யாரிருக்கா செப்பனிடா பாதையிலே
செப்பாம போகுதே தப்பு.


எம்பாவக் கப்பலில் எங்கோ புறப்பட்டோம்
சம்சாரக் கடலில் சருகாய் இடர்ப்பட்டோம்
வெம்பினை காத்து வெரட்டுதே எம்மையே
தம்மபயம் எந்தருளை தா.



No comments: